திமுக-வில் இருந்த குஷ்பு சில கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்தாலும் அவ்வபோது திமுக குறித்து கருத்துக்களை குஷ்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், கருணாநிதிக்கும், தனக்கும் இடையே இருந்த உறவை சில கொச்சைப்படுத்தியதாக குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் புகழ் வணக்கம் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய குஷ்பு, தமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்து, தாம் தமிழையும், அரசியலையும் கற்றுக்கொண்டடேன் என்றார்.
தமக்கு தமிழ்மொழி மீதான பற்று வருவதற்கு காரணமே கருணாநிதி என்றும், மரியாதை என்பதற்கான அர்த்தத்தையும் கருணாநிதியிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தனக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக் கொடுத்ததும் கருணாநிதிதான் என்றார்.
மேலும், தமக்கும் கருணாநிதிக்கும் இடையிலான உறவு தந்தை மகள் போன்றது என்று குறிப்பிட்ட குஷ்பு, ஆனால், அந்த உறவு கொச்சைப்படுத்தப்பட்டதாக கூறி, தனது வேதனையை தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...