’வீரம்’ ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று சிவாவுடன் தொடர்ந்து மூன்று படங்கள் இணைந்து பணியாற்றிய அஜித், இனியும் அவருடன் இணைந்து பணியாற்றுவது நல்லதல்ல, என்று அவரது ரசிகர்கள் நினைப்பது மட்டும் இன்றி, தங்களது எண்ணத்தை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு ‘விவேகம்’ அவர்களை ரொம்பவே விரக்தியடைய செய்துள்ளது.
இதற்கிடையே, அஜித்தின் அடுத்த படம் மற்றும் அதன் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகிறது. அந்த இயக்குநர் யார்? என்பது தெரிந்தால் அஜித் ரசிகர்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...” என்ற பாடலை பாடினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
ஆம், அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநரும் சிவா தானாம். விஜயின் ‘மெர்சல்’ படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறதாம்.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...