சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டிவி நடிகர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்ப் படங்கள் பலவற்றி நடித்திருக்கும் நடிகர் சித்தார்த்தின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’யாகாவாராயினும் நா காக்க’ போன்று சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் சித்தார்த். இவரும் இவரது மனைவி ஸ்மிரிஜாவும் நேற்றிரவு ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் வீட்டிற்கு வந்த ஸ்மிரிஜா ஒரு அறையில் சென்று கதவை பூட்டியிருக்கிறார், இதனால் சித்தார்த் வெளியே தூங்கியிருக்கிறார்.
காலை வெகுநேரம் ஆகியும் தன்னுடைய மனைவி கதவை திறக்காததால் சித்தார்த் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல் துறை சித்தார்த் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்தால் அவரது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
சித்தார்த்துக்கும், ஸ்மிரிஜாவுக்கும் திருமணமாகை 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...