சினிமா நடிகைகள் போல, டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகளும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் சினிமா ஹீரோயின்களையும் தாண்டி இவர்கள் பெண்களிடம் பிரபலமாகிவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பிரபலமான சீரியல் நடிகை தான் சந்தியா. ’அத்திப்பூக்கள்’, ‘வம்சம்’ போன்ற சீரியல்களில் நாயகிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்த இவர், வம்சம் சீரியல் மூலம் பூமிகாவாக தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார்.
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் சந்தியா ஒரு சில தமிழ்ப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், தன்னை நிரூபிக்கும்படியான வேடம் கிடைக்கவில்லையே, என்ற வருத்தம் இருக்கிறதாம்.
இதற்கிடையில், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்திருக்கிறாராம். இந்த விஷயம் அறிந்த கோலிவுட் இயக்குநர்கள் சிலர் சந்தியாவை அம்மா வேடத்திற்காக கேட்கிறார்களாம். அதுவும், ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்க சொல்கிறார்களாம்.
ஒரு அக்கா, அண்ணி என்றால் கூட பரவாயில்லை, இப்படி அம்மா வேடத்திற்கு, அதுவும் ஹீரோ, ஹீரோயின்களின் அம்மாவாக நடிக்க கூப்பிடுகிறார்களே, என்று சந்தியா ரொம்பவே அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...