விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்தான வசனங்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டாலும், இந்திய அளவில் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததோடு, வெளிநாடுகளிலும் வசூல் ரீதியாக படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பாக வெளியான ‘மெர்சல்’ வசூல் ரீதியாக பல சாதனைகளை புரிந்ததோடு, படத்தின் விளம்பரம், சிறப்பு காட்சி திறையிடல், சமூக வலைதளங்களில் டிரெண்ட்டானது என ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியது.
படம் ரிலிஸுக்கு முன்பும், ரிலிஸான பிறகும் தொடர்ந்த சாதனை தற்போது தொடர்ந்துக் கொண்டு இருப்பதால், ’மெர்சல்’ விஜய் ரசிகர்களை கொண்டாட்ட மூடிலேயே வைத்திருக்கிறது.
இதற்கிடையே, சீன நாட்டில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும், சாதனையையும் ‘மெர்சல்’ படைக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அங்கு 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி மேலும் ஒரு சாதனையை மெர்சல் படைக்க இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சுமார் 40 ஆயிரம் திரையரங்கங்கள் கொண்ட சீனாவில் ஹாலிவுட் படங்கள் தான் வெளியாகி கல்லாக்கட்டி வந்த நிலையில், தற்போது பாலிவுட் படங்கள் பல அங்கு வெளியாகி வசூலை வாரிகுவித்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழ் சினிமாவும் சீனாவில் கால்பதிக்க தொடங்கியிருக்கிறது. இதன் முதல் முயற்சி தான் ‘மெர்சல்’ ரிலீஸ்.
டங்கல், சீக்கரட் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற பாலிவுட் படங்களை சீனாவில் வெளியிட்ட நிறுவனம் தான் ‘மெர்சல்’ படத்தையும் வெளியிடப் போகிறது. இந்நிறுவனத்துடன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தற்போது ‘மெர்சல்’ படத்தை சீன மொழியில் டப் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், டிசம்பர் 6 ஆம் தேதி படத்தை வெளியிட இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...