சிம்பு என்றாலே வம்பு, என்ற இமேஜை உடைத்தெரிந்திருக்கும் சிம்பு, மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்த கையோடு ‘மாநாடு’ படத்தில் பிஸியாகியுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர், இரண்டு வருடங்களுக்கு பிஸியாகிவிட்டார்.
இந்த நிலையில், ஏற்கனவே சிம்பு மீது கடுப்பில் இருந்த ‘ஏஏஏ’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், மீண்டும் சிம்புவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தான் தயாரித்த ‘அடங்காதவன் அசராதவன் அன்பானவன்’ படத்தின் போது சில பிரச்சினைகளை செய்த சிம்பு, தற்போது நடித்து முடித்திருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் பொட்டி பாம்பாக, தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு சமத்து பிள்ளையாக இருந்துள்ளாராம். இதே போல் தான் படம் தயாரிக்கும் போதும் சிம்பு நடந்திருந்தால், தனக்கு நஷ்ட்டம் ஏற்பட்டு இருக்காது, என்று கருதிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவின் இந்த ஓரவஞ்சனையால் மிகவும் அதிர்ப்தியடைந்திருப்பவர், மீண்டும் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து பஞ்சாயத்தை கூட்டுமாறு கோரிக்கையும் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...