தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்த இளம் நடிகை ஒருவர், தற்போது முன்னணி நடிகரின் ஆசை நாயகி ஆகியுள்ளார்.
திரைக்கதை ஜாம்பவான் என்று சொல்லப்படும் இயக்குநரின் படம் மூலம் நாயகியாக அறிமுகமான இந்த தமிழ் பேசும் நடிகை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும், இரண்டாம் ஹீரோயின் உள்ளிட்ட சில வேடங்களில் நடித்து வந்தவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாததால், சில படங்களில் ஹீரோயினுக்கு அக்காவாகவும் நடித்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் வெளியான வஞ்சகர்களை கொண்ட உலகம் படத்தில் சர்ச்சையான வேடத்தில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார்.
இந்த நிலையில், நடிகை இப்போது முன்னணி நடிகர் ஒருவரின் ஆசை நாயகியாகியிருக்கிறாராம். அவரது படங்களில் நடிகைக்கு முக்கிய வேடம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றாலும், தனது வாழ்க்கையில் நடிகர் முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறாராம். எப்போதும் நடிகையின் மீது தீவிர ஆர்வத்தோடு இருக்கும் அந்த நடிகர், சில நேரங்களில் நேரடியாக நடிகையின் வீட்டுக்கே விசிட் அடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...