கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 2 இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலர் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஒரு சிலர் மட்டுமே போட்டியில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே, போட்டியை விறுவிறுப்படைய செய்வதற்காக பழைய போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் பிக் பாஸ் இறக்கியுள்ளார். அவர்களும் தங்களால் முடிந்தவரை சிலபல விஷயங்களை செய்து பரபரப்பை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்றைய பிக் பாஸ் எப்பிசோட்டில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது, தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுவர்கள் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விஜயலட்சுமி தண்ணீரை சிந்த, யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர்.
மேலும், போட்டி முடிந்ததும் ஜனனியை தான் அனைவரும் கட்டிப்பிடிக்கின்றனர். அதனால் அவர் தான் பிக் பாஸ் சீசன் 2-வில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றவராக இருக்கலாம்.
எது எப்படியோ, இன்றைய எப்பிசோட்டில் நேரடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறிய அந்த போட்டியாளர் யார்? என்பது தெரிந்துவிடும்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...