’பூந்தோட்ட காவல்காரன்’, ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’, ‘மாணிக்கம்’, ‘அரவாண்’, ‘சரோஜா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, வெங்கட் பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ மற்றும் ஷக்தி சிதம்பரம் இயக்கும் ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
இவ்விரு படங்களும் பிரம்மாண்டமான முறையில் உருவாவதுடன், மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் ‘பார்ட்டி’ படத்தின் வியாபாரம் தற்போதே சூடு பிடித்திருக்கும் நிலையில், ஏற்கனவே மாபெரும் வெற்றி பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் பிரபு தேவா, பிரபு, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பதால் அப்படமும் வியாபார தொடரபாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், இந்த இரண்டு படங்களை தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறது.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பாகவே அப்படத்தின் வியாபாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கினாலே அப்படம் நிச்சயம் வெற்றிப் படம் என்பது உறுதி. அதிலும், முன்னணி டிவி நிறுவனம் ஒன்று ரிலிஸுக்கு முன்பாகவே படத்தை வாங்கினால், அப்படம் சூப்பர் ஹிட் என்பது உறுதி.
ஆக, சன் டிவி வாங்கியிருக்கும் ‘பார்ட்டி’ மற்றும் ‘சார்லி சாப்ளின் 2’ இரண்டு படங்களுமே ஹிட் படங்கள் என்பது தற்போது உறுதியாகிவிட்டதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...