ஹாலிவுட் சினிமா, பாலிவுட் சினிமா, கோலிவுட் சினிமா என்று அனைத்து சினிமாக்களிலும் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பேச தொடங்கி விட்டார்கள். அதிலும் ஸ்ரீரெட்டி என்ற நடிகை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டதோடு, தான் அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துக்கொண்டதையும் வெளிப்படையாக கூறிய பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக பல நடிகைகள் நேரடியாக பேச தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரனும், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உண்மையே, என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், ‘கொடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று நடித்து வருபவர், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதே சமயம், இதுவரை தனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது உண்மை தான் என்று பேசும் நடிகைகள், தங்களுக்கு இதுவரை அதுபோல யாரும் தொல்லை கொடுக்கவில்லை என்று கூறுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
செக்ஸ் டார்ச்சரில் சிக்கும் பல நடிகைகள் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர் பெயரை சொல்வதற்கு பயப்படுகிறார்கள் என்றும், அப்படி அவர்கள் இது குறித்து வெளியே பேசினால் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு வராமால் போய்விடும் என்பதாலாயே, தங்களுக்கு யாரும் இதுவரை தொல்லை கொடுக்கவில்லை என்று கூறிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...