தூத்துக்குடி சம்பவத்தில் கருத்து கூறி கைதான டிவி சீரியல் நடிகை நிலானியின் காதல் விவகாரம் தான் தற்போது சின்னத்திரை உலகில் பரபரப்பாக இருக்கிறது.
நிலானியின் காதலர் லலித் தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், நிலானி அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், லலித் தற்கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தீக்குளித்து இறந்து போன லலித் குறித்து நடிகை நிலானி, பல்வேறு பரபரப்பு தகவல்களை கூறியிருக்கிறார்.
நிலானி ஏற்கனவே இரண்டு குழந்தைகளுடன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இருவரும் சந்தித்துள்ளனர். லலித்தின் காதலுக்கு விருப்பம் தெரிவித்து இரண்டு வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என இருந்துள்ளனர்.
இவ்விசயம் லலித்தின் சகோதரி, சகோதரனிடம் கூற அவர்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறினார்களாம். இதனால் லலித்திடம் இருந்து அவர் விலக, பின் திருமணம் செய்துகொள் என லலித் வீடு புகுந்து டார்ச்சர் செய்துள்ளாராம். இது குறித்து ஏற்கனவே வழக்கு பதிந்து பின் லலித் குடும்பத்தினருக்காக நிலானி வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டாராம்.
பின் இருவருக்கும் தொடர்பில்லாமல் போக அண்மையில் தூத்துக்குடி விசயத்தில் கைதான நிலானியை தானாக முன்வந்து ஜாமினில் எடுத்தாராம் லலித். பின் மறுபடியும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி தன்னை தாக்கியதோடு வீடு புகுந்து குழந்தைகளையும் அடித்ததாக நிலானி புகார் அளித்துளார்.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன் வந்து ஒரு நாள் மட்டும் என் விருப்படி நடந்துகொள், மறுப்பு தெரிவிக்கக் கூடாது என கூறி பஸ்ஸில் தென் மாவட்டத்திற்கு அழைத்து சென்றாராம். பஸ்ஸில் வைத்து நிலானி கால் விரலில் மெட்டி அணிவித்து வீடியோ எடுத்தாராம் லலித். அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பல டார்ச்சர்களை அனுபவித்த நேரத்தில் ஒரு நாள் வீடு புகுந்து பின்புறமாக தாலி கட்டினாராம். அதை நிலானியும் அறுத்து எறிந்திருக்கிறார். திருமணம் எதுவும் நடக்கவில்லை. பொய்யான தகவல் பரபரப்படுகிறது என கூறும் நிலானி இனி நான் உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை என போலிஸ் விசாரணையில் கதறி அழுதாராம்.
லலித் போலிஸ் கொடுத்த மின்சார ஷாக்கினால் ஆண்மையை இழந்துவிட்டார் என்றும் உலகிற்கு முன்பு ஒரு உடலுறவை எதிர்பார்க்காத ஒரு மனைவி வேண்டும் என்று தான் என்னை டார்ச்சர் செய்தார் என்றும் கூறிய தகவலால் நடிகை நிலானி விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...