நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின், புதிய வீட்டில் இருந்து 2 பசு மாடுகள் திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த், குடும்பத்தோடு வசித்து வருகிறர். இதற்கிடையே, சென்னை காட்டுப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்றையும் விஜயகாந்த் கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டில் பல செல்லப்பிராணிகளும், கால்நடைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு பசு மாடுகள் திடீரென மாயமாகியுள்ளன. பசுமாடுகள் மாயமானது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் வீட்டில் இருந்து பசு மாடுகள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...