‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிரபல இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
புகழ் பெற்ற இயக்குநர் ஒருவரை சந்திக்க சென்ற போது, அவர் யாஷிகாவின் அம்மா மூலமாக பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தாராம். அப்பா வயதுள்ள அந்த இயக்குநர் தன்னை நேரடியாக பாலியல் துன்புறுத்தல் செய்திருந்தால் நிச்சயம் புகார் கொடுத்திருப்பேன், என்று கூறியிருக்கும் யாஷிகா, அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், பொது இடத்தில் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு சரியான பதிலடி கொடுத்தாராம். போலிசில் அது பற்றியும் புகார் கூறியிருந்தாராம்.
அது மட்டுமல்ல, சமீபத்தில் ஒரு வீடியோவில் போலிஸ்காரர் ஒருவர் ஒரு பெண்ணிடம் என்ன ரேட் என கேட்ட வீடியோ வைரலானது. அதில் இருந்த பெண் யாஷிகா தானாம். இந்த தகவலை யாஷிகாவே கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...