‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிரபல இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
புகழ் பெற்ற இயக்குநர் ஒருவரை சந்திக்க சென்ற போது, அவர் யாஷிகாவின் அம்மா மூலமாக பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தாராம். அப்பா வயதுள்ள அந்த இயக்குநர் தன்னை நேரடியாக பாலியல் துன்புறுத்தல் செய்திருந்தால் நிச்சயம் புகார் கொடுத்திருப்பேன், என்று கூறியிருக்கும் யாஷிகா, அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், பொது இடத்தில் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு சரியான பதிலடி கொடுத்தாராம். போலிசில் அது பற்றியும் புகார் கூறியிருந்தாராம்.
அது மட்டுமல்ல, சமீபத்தில் ஒரு வீடியோவில் போலிஸ்காரர் ஒருவர் ஒரு பெண்ணிடம் என்ன ரேட் என கேட்ட வீடியோ வைரலானது. அதில் இருந்த பெண் யாஷிகா தானாம். இந்த தகவலை யாஷிகாவே கூறியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘பெருசு’...
அறிமுக இயக்குநர் பாண்டி இயக்கத்தில், பெண் பத்திரிகையாளர் கவிதா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராபர்’...
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...