தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயினான நிவேத பெத்துராஜ் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் கவர்ச்சியான தனது புகைப்படங்களை வைரலாக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் தற்போது தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசி வரும் நிலையில் நிவேதா பெத்துராஜும், அது குறித்து கூறியியிருக்கிறார்.
பார்ட்டி ஒன்றுக்கு சென்ற நிவேதா பெத்துராஜை பலாத்காரம் செய்ய முயற்சி நடந்ததாம். அதில் இருந்து தப்பித்தவர், அந்த பார்ட்டிக்கு போனது தனது எனது தவறு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அதில் இருந்து எப்படி விடுபட வேண்டும் என்று தனக்கு தெரியும், என்றும் கூறியுள்ளார்.
மேலும், துபாயில் தான் வளர்ந்தாலும் மதுரை தமிழ்ப் பெண் என்பதால் அபோது நடந்த அந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து வெளியில் சொல்லவில்லை. சம்பவம் நடந்த உடனே அதை வெளியில் தெரிவிக்க வேண்டும், காலம்தாழ்த்தி கூறினால், நமது குடும்பத்திற்கு தான் பாதிப்பு, என்றும் நிவேதா கூறியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...