Latest News :

படத்தில் மட்டும் அல்ல, இந்த விஷயத்திலும் லாரன்ஸுக்கு ஒத்துழைத்த ஓவியா!
Monday October-29 2018

நடிப்பு, இயக்கும், தயாரிப்பு என்று சினிமாவில் பிஸியாக இருக்கும் ராகவா லாரன், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதைப் போல சமூக சேவைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வரும் லாரன்ஸ், தற்போது அரசு பள்ளிகளை தத்தெடுத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

“அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும்” என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த வேண்டுகோளுக்கினங்க, சென்னை பாடி அருகில் உள்ள அரசு பள்ளி ஒன்றையும், செஞ்சி அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தவர், பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்திருக்கிறார்.

 

செஞ்சி அருகே மேல்மலயனூர் பக்கத்தில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பிட வசதி மற்றும் சிதிலமடைந்த பகுதிகளை புதுப்பித்து வர்ணம் அடித்து, புதிய கட்டிடமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்.  இன்று (அக்.29) ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் என்பதால், இன்றைய தினம் புதுப்பிக்கப்பட்ட மேல்மலயனூர் அரசு பள்ளியின் திறப்பு விழாவை, அப்பள்ளி நிர்வாகத்தினர் வைத்துள்ளனர்.

 

லாரன்ஸின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால், பள்ளி திறப்பு விழாவில் லாரன்ஸால் கலந்துக்கொள்ள முடியவில்லை. அதே சமயம், அவர் இயக்கு நடிக்கும் ’காஞ்சனா 3’ படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ஓவியாவை, பள்ளி திறப்பு விழாவில் பங்கேற்க செய்துள்ளார். அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பள்ளி திறப்பு விழாவில் நடிகை ஓவியா பங்கேற்கிறார்.

 

தன்னால் படிக்க முடியவில்லை என்றாலும், படிக்கும் குழந்தைகள் நிம்மதியாக படிக்க வேண்டும், என்பதால் இந்த இரண்டு அரசு பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்திருக்கும் லாரன்ஸ், இதை இவ்விருண்டு பள்ளிகளோடு நிறுத்திக் கொள்ளாமல் தன்னால் எத்தனை பள்ளிகளை சீரமைக்க முடியுமோ அத்தனை பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறார்.

 

லாரன்ஸின் பள்ளி பணி தொடர வாழ்த்துகள்.

Related News

3687

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery