Latest News :

என் அத்தையை விட நிறைய படங்களில் நடிக்கனும் - வாரிசு நடிகையின் ஆசை
Monday October-29 2018

கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் ஹீரோவாக நடிக்கும் ‘விடியாத இரவொன்று வேண்டும்’ படத்தின் மூலம் ஹ்ரித்திகா என்பவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் பிரபல நடிகை ஆம்னியின் தம்பி மகள் ஆவார்.

 

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்த ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன், நடிகை ஆம்னியை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஆம்னி, தற்போது தெலுங்கில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், நடிகை ஆம்னியின் தம்பி சீனிவாஸ் மகள் ஹ்ரித்திகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரியாகியிருக்கிறார். தனது அத்தை ஆம்னியின் ஆசியோடு சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் ஹ்ரித்திகா, தனது அத்தையை விட நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதோடு, அவரை விட அதிகமான விருதுகளை வாங்க வேண்டும், என்று ஆசைப்படுகிறார்.

 

தனது சினிமா பயணத்தின் ஆரம்பம் குறித்து கூறிய ஹ்ரித்திகா, “எனது அத்தை ஆம்னிக்கு தெலுங்கில் மிகப் பெரிய செல்வாக்கு. அவர் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். அவரை பார்த்து வளர்ந்த நான் அவரைப் போலவே நடித்து பேர் வாங்க வேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை.

 

அதே மாதிரி மாமா காஜாமைதீனும் ஏராளமான படங்களை எடுத்து பேர் பெற்றவர். இருவரும் பள்ளிப் படிப்பை முடி அதற்குப் பிறகு நடிக்கலாம் என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர்.

 

நடிப்பது என்று முடிவான பிறகு முறைப்படி பரத நாட்டியம் மற்றும் சினிமாவுக்குண்டான டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன். 

 

பூர்வீகம் ஆந்திரா வளர்ந்தது தமிழ் நாடு இப்போ காலேஜ் படிச்சிட்டு இருப்பது பெங்களூரில். அசோக் நடிக்கும் படத்தில் வாய்ப்பு வந்ததும் ஒத்துக்கிட்டேன். படம் முடிவடைந்து விட்டது. இனி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என் அத்தையை விட நிறைய படங்களில் நடிக்கணும். அவரை விட அதிகமான விருதுகளை பெற்று அவர்களிடம் அதை காணிக்கையாக்க வேண்டும். அது தான் என் ஆசை.” என்றார்.

Related News

3689

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery