பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதோடு, கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் புகார் கூறி வந்தார். அந்த வரிசையில் பிரபல நடன இயக்குநர் கல்யாண், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.
மேலும், அந்த பெண் கல்யாண் குறித்து தெரிவித்த பாலியல் புகார் பதிவை பாடகி சின்மயி ரீட்வீட் செய்து அதை வைரலாக்கி பரபரப்பாக்கினார். பிறகு, அந்த பாலியல் புகாரை பதிவு செய்த பெண்ணே, “நான் விளையாட்டுக்காக அப்படி போட்டேன், ஆனால் அதை விசாரிக்காமல் சின்மயி அப்படியே ரீட்வீட் செய்துவிட்டார்” என்று கூறினார். இதன் பிறகு கல்யாண் மீது கூறப்பட்ட புகார் பொய்யானது என்று தெரிந்தவுடன் சின்மயி, மவுனமாகிவிட்டார்.
இந்த நிலையில், இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடன இயக்குநர் கல்யாண், ”அந்த பெண் விளையாட்டாக கூறியதாக கூறிவிட்டார். ஆனால் அதை பரபரப்பாக்கிய சின்மயி அது சம்பந்தமாக என்னிடம் சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவர், என் விஷயத்தில் இவ்வாறு நடந்து கொள்வார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...