கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் துனியா விஜய். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நாகரத்னா தனது பிள்ளைகள் மோனிகா, மோனிஷா, சாம்ராட் ஆகியோருடன் தனியாக வசித்து வர, துனியா விஜய் இரண்டாவது மனைவி கீர்த்தி கவுடாவுடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, ஜிம் டிரெய்னரை தாக்கிய வழக்கில் கடந்த மாதம் துனியா விஜய் கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு கீர்த்தி தான் காரணம், என்று கூறி அவரை நாகரத்னா தாக்கியுள்ளார். கீர்த்தியின் வீட்டுக்கு சென்ற நாகரத்னா, தனது செருப்பால் அவரை தாக்கியுள்ளார்.
நாகரத்னா கீர்த்தியை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவை பார்த்த போலீசார் தானாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
இது குறித்து நாகரத்னாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது, போலீஸ் வருவதை பார்த்த நாகரத்னாவின் மகள் கதவை திறக்காமல் இருந்துள்ளார். அந்த நேரத்தில் நாகரத்னா வீட்டை விட்டு வெளியேறியவர் தற்போது வரை தலைமறைவாக இருக்கிறாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...