தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட மீ டூ விவகாரத்தில் முதலில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, பல்வேறு புகார்களை எதிர்கொண்டு வந்த நிலையில், மன அமைதிக்காக மதுரையில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தாராம்.
அப்போது, அவருக்கு உணவு ஒவ்வாமையினால் உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட வைரமுத்து சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், நேற்று அவருக்கு மீண்டும் உடல் நலம் சரியில்லாமல் போக உடனே சென்னை க்ரீம்ஸ் சாலை அப்பல்லோவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவருக்கு உணவு ஒவ்வாமையினால் தான் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மீ டூ விவகாரத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் வைரமுத்துவுக்கு தற்போது உடல் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவருக்கு வந்திருக்கும் உணவு ஒவ்வாமை என்ற புது பிரச்சினையினாலும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...