ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் ஆளும் அதிமுக அரசு, அக்காட்சிகளை நீக்க வலியுறுத்தியதோடு, படத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, நேற்று முதல் சர்கார் ஓடும் திரையரங்கங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக தொண்டர்கள் விஜய் பேனர்களை கிழித்தெரிந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் சில திரையரங்கங்களில் சர்கார் காட்சி நேற்று நிறுத்தப்பட்டது.
மேலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுமாறு அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்ய முயற்சித்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால், காவல் துறை இதனை மறுத்தது.
இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...