இந்தியா சார்பில் முதன் முதலாக பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென், பல இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ‘ரட்சகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிறகு ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதோடு தமிழ் சினிமாவை ஏறக்கட்டினார்.
தற்போது 42 வயதாகும் சுஷ்மிதா சென், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என்று பலருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும், இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரோமன் ஷால் என்ற 27 வயது இளைஞரை சுஷ்மிதா சென் காதலித்து வருகிறார். மாடலான அவருடன் சுஷ்மிதா சென் தாஜ்மஹாலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, அதை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டார்.
சுஷ்மிதா சென்னுக்கும், ரோமனுக்கும் இடையே 16 வயது வித்தியாசம் இருந்தாலும், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களாம். இவர்களது திருமணத்திற்கு, சுஷ்மிதாவின் வளர்ப்பு மகள்களும் சம்மதம் தெரிவித்து விட்டார்களாம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...