தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்த அனுஷ்கா ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ என்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்குப் பிறகு காணாமல் போய்விட்ட அளவுக்கு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். காரணம், படங்களுக்காக தனது உடல் எடையை கூட்டியவர், மீண்டும் அதை குறைக்க முடியாமல் போனதால் தான்.
இதற்கிடையே, அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் என்றும், அவருக்கு மாப்பிள்ளை பார்க்க அவரது பெற்றோர் தொடங்கி விட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தனது உடல் எடையை குறைத்த பிறகு தான் புதுப்படங்களில் நடிப்பேன், என்று அனுஷ்கா அறிவித்ததோடு, தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் விருப்பம் இல்லை, என்றும் கூறினார்.
இந்த நிலையில், அனுஷ்கா புது படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘சைலன்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக மாதவன் நடிக்கிறார்.
மாதவன் நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் தான் அனுஷ்கா தமிழில் அறிமுகமானார். தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு ‘சைலன்ஸ்’ படம் மூலம் மாதவனும், அனுஷ்காவும் இணைகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...