பாலிவுட்டில் தொடங்கிய மீ டூ விவகாரம், தமிழ் சினிமாவிலும் பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரை தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேசி வந்தனர்.
இதற்கிடையே, மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன் கடந்த நான்கு ஆண்டுகளாக மீ டூ கொடுமையை தான் அனுபவித்து வருவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
’பீட்சா’, ‘சேதுபதி’, ‘சத்யா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் ரம்யா நம்பீசன், மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் மீ டூ விவகாரம் தலை தூக்குவதற்கு முன்பாக மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக மலையாள நடிகைகள் பலர் குரல் கொடுக்க தொடங்கினார்கள். அதில் முக்கியமானவர் ரம்யா நம்பீசன்.
மலையாள நடிகர் சங்கத்தில் இருந்த ரம்யா நம்பீசன், மலையாள நடிகைகளுக்கு எதிராக நடிகர்கள் நடந்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கடந்த ஆண்டு சினிமா துறையில் உள்ள பெண்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், பெண்களுக்கு எதிராக சினிமா துறையில் ந டக்கும் விஷங்கள் பற்றி கேள்வி கேட்டதால், ரம்யா நம்பீசனுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பட வாய்ப்பும் இல்லையாம். மீறி எதாவது படத்திற்காக அவரை அனுகினாலும், அந்த குழுவினரை சிலர் தடுத்து விடுகிறார்களாம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...