கடந்த தீபாவளியை போல இந்த வருட தீபாவளிக்கும் தனது படத்தின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், மிகப்பெரிய வெற்றிப் படத்தை விஜய் கொடுத்திருக்கிறார். தற்போது வரை தமிழகம் முழுவதும் சர்கார் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இதற்கிடையே, சர்கார் படத்திற்கு எதிராக ஆளும் அதிமுக அரசு போராட்டங்கள் நடத்தி, படத்தின் பேனர்களையும், விஜய் போஸ்டர்களையும் கிழித்தது தொடர்பாக விஜய் பதில் ஏதும் பேசாமல் இருந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகளை ஏற்று படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை தயாரிப்பு தரப்பு நீக்கிவிட்டது.
இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் விஜய், நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கேக் வெட்டியுள்ளனர். இந்த கேக்கின் மூலமாக விஜய் அதிமுக அரசுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆம், சர்கார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் விஜய் வெட்டிய கேக்கில், மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்களின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தான் தொடர்ந்து அரசை எதிர்த்து கேள்வி கேட்பதோடு, யார் என்ன செய்தாலும் தனது படங்களில் மட்டும் அல்ல, தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் அரசியல் இருக்கும் என்பதை விஜய் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...