‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்த நரேன், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘யுடர்ன்’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருந்தவர், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
புதுமுகங்கள் நடிப்பில் ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகும் ‘கண் இமைக்கும் நேரத்தில்’ என்ற படத்தை நரேன் தயாரிக்கிறார்.
கன்னடத்தில் வெற்றிப் பெற்ற ‘வாசு’ என்ற படத்தை இயக்கிய அஜித் வாசன், இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் உருவாகிறது.
நள்ளிரவு ஒரு மணி முதல் 4 மணி வரை நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி மற்றும் நரேன் வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
‘கண் இமைக்கும் நேரத்தில்’ படத்தை இயக்கும் அஜித் வாசன், நரேனுடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...