விஜயின் ’சர்கார்’ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது போல, மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாள் முதலே பிரம்மாண்டமான வசூலை ஈட்டி வருவதாக கூறப்படுவதோடு, ரூ.200 வசூலை பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வர்லட்சுமி உள்ளிட்ட ஒட்டு மொத்த படக்குழுவினரும் ‘சர்கார்’ மாபெரும் வெற்றி என்று அறிவித்ததோடு, சமீபத்தில் வெற்றியை கொண்டாடவும் செய்தார்கள்.
இந்த நிலையில், ‘சர்கார்’ உண்மையிலேயே வெற்றிப் படமா? என்பது குறித்து சென்னை ரோனினி திரையரங்கத்தின் உரிமையாளர் சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நேற்று திங்கட்கிழமை என்றாலும் படத்திற்கு நல்ல கூட்டம் வந்தது. சர்கார் பிளாக்பஸ்டர் படம்.” என்று தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், சர்கார் மிகப்பெரிய வெற்றிப் படம் என்பதை திரையரங்க உரிமையாளர்களே அறிவித்திருப்பதால், சர்கார் படம் பற்றி வசும் வசூல் உள்ளிட்ட அனைத்தும் உண்மை என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது.
#Sarkar good hold on Monday @rohinisilverscr !! Blockbuster 💥💥💥
— Nikilesh Surya (@NikileshSurya) November 12, 2018
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...