ரஜினி, கமல் ஆகியோர் நேரடி அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், கமலைப் போல ரஜினிகாந்த் இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை. மேலும், தனது ஒவ்வொரு பேச்சின் மூலம் சில சர்ச்சைகளில் சிக்கி வருவதை வாடிக்கையாகவும் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய ரஜினிகாந்த், ரசிகர்கள் அந்த உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்தின் உருவ முத்திரையை பொறித்து கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அரசு வழங்கிய நிவாரண பொருட்களில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உருவ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், ஸ்டிக்கர் ஒட்டிய பிறகே நிவாரண பொருட்கள் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக-வின் தீவிரம் காட்டியதால், சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் போனது.
அதிமுக-வின் இத்தகைய நடவடிக்கையை சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்ததோடு, திரைப்படங்களிலும் இதனை சுட்டிக்காட்டி விமர்சித்தார்கள். ஏன், ஜெயலலிதா மறைந்தாலும், அவரது இந்த ஸ்டிக்கர் விஷயம் மட்டும் இன்னும் மறையவில்லை. தற்போது வரை, தமிழ் சினிமாவில் வெளியாகும் அரசியல் படங்களில் இந்த ஸ்டிக்கர் மேட்டரை சுட்டிக் காட்டி விமர்சித்து வருகிறார்கள்.
அதிமுக கூட ஏதோ அரசியல் கட்சி, தனது கட்சி தலைவர் மற்றும் முதல்வருக்காக ஸ்டிக்கர் ஒட்டினார்கள். ஆனால், இந்த ரசிகர்கள் ரஜினி கட்சியே தொடங்கவில்லை அதற்குள்ளே இப்படி முத்திரை குத்தி பிராண்டிங் செய்கிறார்களே, என்று பலர் சிரிப்பாய் சிரிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
ரஜினியின் பேட்டியால் சிரித்து வந்த பொதுமக்கள், தற்போது அவரது ரசிகர்களின் செயல்பாட்டாலும் சிரிக்க தொடங்கிவிட்டார்கள்.
இனி...தமிழக மக்களுக்கு நல்லா பொழுதுபோகும்...
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...