’தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் அட்லீ விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். விஜயின் 63 வது படமான இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பது யார்? என்ற கேள்வியை விட படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும், என்பது தான் ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
இதற்கிடையே, இப்படம் அரசியல் பின்னணியை கொண்ட படம் என்றும், இதற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பை அட்லீ பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், இது குறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காத அட்லீ, தற்போது விஜயின் 63 வது படம் குறித்த சீக்ரெட்டை வெளியிட்டிருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய இயக்குநர் அட்லீ, ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருப்பது உண்மை தான். அந்த தலைப்புக்கு ஏற்ற அரசியல் கதை என்னிடம் இருப்பதும் உண்மை தான். ஆனால், விஜயின் 63 வது படம் அரசியல் பின்னணி கொண்ட படம் அல்ல, படத்திற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பும் வைக்கப்போவதில்லை. அரசியல் பின்னணி கொண்ட படத்தை இயக்கும் போது அந்த தலைப்பை வைத்துக் கொள்வேன்.” என்று கூறியுள்ளார்.
மொத்தத்தில், ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பு விஜயின் 63 வது படத்திற்கு வைக்கப் போவதில்லை என்பதை இயக்குநர் அட்லீ தெளிவாக கூறிவிட்டார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...