சினிமா நடிகர், நடிகைகளைப் போல தற்போது டிவி தொகுப்பாளினி மற்றும் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி மிகப்பெரிய ரசிகர்களை கொண்டவர் பிரபல டிவி தொகுப்பாளினி துர்கா மேனன்.
மலையாள தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்த துர்கா மேனன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான துர்கா மேனன், லுபஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 21 நாட்களாக மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்த துர்காவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கல் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரது இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான கொடுங்களூரில் நடைபெற உள்ளது.
துர்கா மேனனின் மரணம் மலையாள டிவி மற்றும் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...