தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் ஏராளமானவர்கள் இருப்பது போல, இவர்களுக்கு ரசிகர்களும் ஏராளமாக இருப்பதால், இவர்களது படங்களுக்கு சிறப்பான ஓபனிங் இருப்பதோடு, வசூல் ரீதியாக இவர்களது படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்று வருகிறது.
இதற்கிடையே, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு, தமிழகத்தில் அதிகமான வசூல் ஈட்டிய படங்களில் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் யாருமே முதலிடத்தை பிடிக்கவில்லை, மாறாக தெலுங்கு ஹீரோ பிரபாஸ் தான் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
இதோ அந்த பட்டியல்,
பாகுபலி 2 - ரூ.150 கோடி (தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி)
மெர்சல் - ரூ. 128 கோடி
சர்கார் - ரூ.128 கோடி (இரண்டு வார கலெக்ஷன்)
எந்திரன் - ரூ.95 கோடி
தெறி - ரூ.78 கோடி
ஐ - ரூ.74 கோடி
கபாலி - ரூ.73 கோடி
வேதாளம் - ரூ.72 கோடி
துப்பாக்கி - ரூ.70 கோடி
கத்தி - ரூ.67 கோடி
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...