சமுத்திரக்கனி இயக்கத்தில் சகிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிநயா. வாய் பேச முடியாத, காது கேற்கும் திறன் அற்றவராக இருந்தாலும், அந்த குறைகள் தன்னிடம் இருப்பதை காட்டிக்கொள்ளாமல் திரையில் தோன்றும் அபிநயாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்து வந்த அபிநயா, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கானா தேர்தலில் அபிநயாவும் களம் இறங்கியுள்ளார். வேட்பாளராக அல்ல, தூதராக. ஆம், வர இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் அசெம்பிளி தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக, நடிகை அபிநயாவை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.
இதன் மூலம், விரைவில் அபிநயாவை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான குறும்படத்தை தேர்தல் ஆணையம் தயரித்து வெளியிட உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...