Latest News :

நடிகர் ராதாரவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய பாடகி சின்மயி!
Thursday November-22 2018

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பிரபல பின்னணி பாடகி சின்மயி, அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்ததோடு, தொடர்ந்து பல மீது பாலியல் புகார் கூறி வந்தார். சின்மயியை தொடர்ந்து மேலும் சில நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வந்ததால், தமிழ் திரையுலகில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

 

இதையடுத்து, சிலர் மீ டூ புகார் கூறும் நடிகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த நிலை நீடித்தால், நாடகங்களில் ஆண்கள் பெண்கள் வேடம் போடுவது போல, சினிமாவிலும் வரும் என்று கூறி, எச்சரிக்கையும் விடுத்தனர்.

 

இதற்கிடையே, பாடகியாக மட்டும் இன்றி பிரபல ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த சின்மயி, டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருந்தார். ஆனால், அவர் கடந்த இரண்டு வருடங்கள் சந்தா கட்டாததால், அவரை சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த செய்தியை நாம், ஏற்கனவே நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

 

இந்த நிலையில், தான் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் நடிகர் ராதாரவி இருப்பதாக சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். டப்பிங் யூனியனின் தலைவராக இருக்கும் ராதாரவி, மீ டூ புகார் கொடுத்ததால் தன்னை நீக்கியுள்ளார். அவர் தன்னை எதிர்த்து பேசுபவர்களை நீக்கிவிடுவார், என்று சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும், ஏற்கனவே தனக்கு ரெட் போடுவதாகவும் ராதாரவி மிரட்டியதாக, குற்றம் சாட்டியிருக்கும் சின்மயி, தனக்கு எந்தவித முன் அறிவிப்பு தராமலே யூனியனில் இருந்து நீக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related News

3790

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery