நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா, சென்னையை சேர்ந்த தொழிலதிரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
இதற்கிடையே, செளந்தர்யா நீதிமன்றம் மூலம் முறைப்படி விவாகரத்து பெற்று கணவரை பிரிந்த நிலையில், திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த தொழிலதிபரின் மகனுடன் பழகிய செளந்தர்யா, அவருடன் காதல் வயப்பட்டார். தற்போது இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்து, கடந்த மாதம் எளிமையான முறையில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்களுடைய திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
தற்போது, செளந்தர்யாவின் இரண்டாவது திருமணத்திற்கான அழைப்பிதழ் தயாராகியுள்ளது. திருமண அழைப்பிதழை திருப்பதி ஏழுமலையான் கோவில் வைத்து செளர்ந்தர்யா நேற்று முன் தினம் பூஜை செய்தார். அவருடன் லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட அவரது நெருங்கிய உறவினர்கள் சுமார் 20 பேர் சென்றார்கள்.
மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனது அடுத்த படமான மட்காவுக்காக இதுவரை செய்யாத புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்...
இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, ’மார்டின்’ படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, என ஐந்து மொழிகளில் மனதை துளைக்கும் வரிகளுடன், தீப்பிடிக்கும் இசையில் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது...
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப்பட்டுள்ளது...