தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத், பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியும் வருகிறார். அப்படி அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், தற்போது இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் உருவாகும் ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார்.
”கண்ணம்மா...” என்று தொடங்கும் இந்த பாடல், அனிருத்தின் மந்திரக்குரல் மூலம் ரசிகர்களை மயக்கும் விதத்தில் உருவாகியிருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘றெக்க’ படத்தில் டி.இமானின் இசையில் வெளியான “கண்ணம்மா...” என்ற பாடல் தற்போது வரை ரசிகர்களின் மனதிலும், செல்போனிலும் ஒலிக்கும் பாடலாக உள்ள நிலையில், அனிருத்தின் இந்த புதிய “கண்ணம்மா...” டிமானின் கண்ணம்மாவை காலி பண்ணுகிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...