Latest News :

கல்லூரி மாணவிகளின் கனவை நினைவாக்கிய இளையராஜா!
Saturday January-12 2019

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது கல்லூரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பாடல் பாடி வருவதோடு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாலும் செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் எத்திராஜ் மற்றும் ராணி மேரி கல்லூரிகளின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர், அங்கே தனது பிறந்தநாளையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

 

மேலும், நிகழ்ச்சியில் பாட்டு பாடிய இளையராஜா, மாணவிகளுடன் கலந்துரையாடியதோடு, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 

அப்போது அவரது இசையைப் பற்றியும், இசையில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் அவரிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட மாணவிகளில் சிலர், நிகழ்ச்சியில் பாட்டு பாடியதோடு, இளையராஜா இசையில் பாட்டு பாட தாங்கள் விரும்புவதாகவும், அது தங்களது கனவு என்றும் கூறினார்கள்.

 

இந்த நிலையில், பாட்டு பாட விரும்பிய அந்த இரண்டு கல்லூரி மாணவிகள் சிலரை அழைத்த இளையராஜா, அவர்களிடம் குரல் சோதனை செய்து, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 பேரை தேர்வு செய்திருக்கிறார்.

 

இந்த 9 மாணவிகளும், இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாக உள்ளனர். இதன் மூலம் மாணவிகளின் கனவை இளையராஜ நினைவாக்கிவிட்டார்.

Related News

4058

”ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய ஷங்கர் நிறைய வைத்துள்ளார்” - ‘இந்தியன் 2’ பற்றி கமல்ஹாசன் கூறிய சுவாரஸ்ய தகவல்கள்
Monday July-08 2024

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  ’இந்தியன் 2’...

நாயகன் ராதாரவியின் 50 வது வருடத்தை கொண்டாடிய ‘கடைசி தோட்டா’ படக்குழு!
Sunday July-07 2024

‘லோக்கல் சரக்கு’ படத்தை தொடர்ந்து ஆர்...

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘செளகிதார்’ தொடங்கியது!
Friday July-05 2024

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...