விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வரும் கெளதம் வாசுதேவ் மேனன், அடுத்ததாக துல்கர் சல்மானுடன் கைகோர்க்க உள்ளார். ஆனால், இயக்குநராக அல்லாமல் நடிகராக. ஆம், துல்கர் சல்மான ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறுகையில், “கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம். ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது, இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது.” என்றார்.
ரிது வர்மா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் கே.பி.ஒய் புகழ் ரக்ஷன் முக்கிய வேடத்தில் நடிக்க, நிரஞ்சன் அகத்தின் நடிகையாக அறிமுகமாகிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெரி சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...