தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகும், பழமையான தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்கும் ஏ.வி.எம் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் சுமார் 180 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.
பல தலைமுறைகளாக திரைப்படம் தயாரித்து வந்த இந்த நிறுவனம் கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு ‘முதல் இடம்’ என்ற படத்துடன் திரைப்படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டது. இதை தொடர்ந்து இனி ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பில் ஈடுபோவதில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் மீண்டும் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘அயன்’ படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...