பிரபு தேவா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான காயத்ரி ரகுராம், தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தார். ஹீரோயின் வேடம் கிடைக்காததால், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர், பிறகு நடன இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார்.
பிறகு திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர், கணவருடனான கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றதோடு, மீண்டும் சினிமாவில் ஈடுபாடு காட்ட தொடங்கினார். அதன்படி, சுமார் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் காயத்ரியை பிக் பாஸ் தான் பிரபலமாக்கியது, என்றால் அது மிகையல்ல. இப்படி பிக் பாஸ் மூலம் பிரபலமான காயத்ரி, தற்போது பல படங்களில் நடித்து வருவதோடு, ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்தும் விட்டார்.
இந்த நிலையில், தனது இரண்டாவது திருமணம் குறித்து முதல் முறையாக காயத்ரி மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய காயத்ரி, “நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள யாரும் தடை போடவில்லை, அது தான் முக்கியம் என்றும் நான் தேடவில்லை. நடந்தால் சந்தோஷம் என்ற மனநிலை இருக்கிறது. எனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று ஆசை, அதற்காகவாவது திருமணம் நடக்கணும் பார்ப்போம்.” என்று தெரிவித்திருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா ஆகியோரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ திரைப்படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் படம் என்ற பெருமையோடு, ரூ...
’சித்தா’ என்கிற உணர்வுப்பூர்மான கதையம்சம் கொண்ட வெற்றிப் படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘மிஸ் யூ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...
இந்தியாவையே தன் ’கதர் 2’ படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார்...