80 களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை பானுப்ரியா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சத்யராஜின் மனைவியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், பானுப்ரியா வீட்டில் பணியாற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்திருக்கும் புகாரில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக சிமியை பானுப்ரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பியதாகவும், ஆனால் ஒன்றரை வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படாததோடு, பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து நேரில் சென்று கேட்டதற்கு, தங்களிடம் பணம் இருக்கிறது, திருட்டு பழி சுமத்தி உன் மகளை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம், என்று மிரட்டியதாகவும், சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா ஆகியோரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ திரைப்படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் படம் என்ற பெருமையோடு, ரூ...
’சித்தா’ என்கிற உணர்வுப்பூர்மான கதையம்சம் கொண்ட வெற்றிப் படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘மிஸ் யூ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...
இந்தியாவையே தன் ’கதர் 2’ படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார்...