சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘நாடோடிகள்’ படத்தின் தொடர்ச்சியாக ‘நாடோடிகள் 2’ உருவாகி வருகிறது.
சமுத்திக்கனி இயக்கும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இதில் சசிகுமார், அஞ்சலி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். சமுத்திரக்கனி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஜாக்கி கலையை நிர்மாணிக்க யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். திலீப் சுப்புராயண் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, தினேஷ், ஜான் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். சிவசந்திரன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் இருக்கும் இப்படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...