80 களில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயப்பிரதா, ‘சலங்கை ஒலி’, ‘மன்மத லீலை’, ‘நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்திருப்பதோடு, இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல இந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.
தீவிர அரசியலில் ஈடுபட்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜெயப்பிரதா, தற்போது சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஜெயப்பிரதா முன்னணி நடிகையாக இருந்த போது, அவரது புகைப்படத்தை ஆபாசமாக மாபிங் செய்து சில விசமிகள் வெளியிட்டார்களாம். அவை வெளியானதும், ஜெயப்பிரதா தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு ஒருவர் ஆசிட் மிரட்டல் விடுத்தாராம். இப்படி பல தடைகளையும், எதிர்ப்புகளையும் கடந்து தான் அவர் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் வெற்றி பெற்றிறாராம்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...