ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். குழந்தை செளந்தர்யாவிடம் வளரும் நிலையில், அஸ்வின் வேறு ஒரு திருமணம் செய்துக் கொண்டார்.
இதற்கிடையே, செளந்தர்யாவும் விசாகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார். மிகப்பெரிய தொழிலதிபரான விசாகன் - செளந்தர்யா திருமணம் வரும் பிப்ரவரி 10,11 ஆகிய தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தனது மறுமணம் குறித்து முதல் முறையாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் செளந்தர்யா, தனது சமூக வலைதள பக்கத்தில் பட்டு புடவையுடன் போட்டோவை வெளியிட்டு, “இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்று பதிவிட்டுள்ளார்.
#OneWeekToGo #BrideMode #Blessed 😊😊😊🙏🏻🙏🏻🙏🏻 #VedVishaganSoundarya #Family ❤️❤️❤️ pic.twitter.com/fJYkHp8J1l
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 4, 2019
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...