தமிழ் சினிமாவின்ம் முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவராக இருக்கும் விஜய் சேதுபதி, தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதோடு, வசூலை வாரி குவிக்கும் படங்களையும் கொடுத்து வருகிறார். அப்படி அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘96’ படம் 100 நாட்களையும் கடந்து ஓட்டியது. இதனை கொண்டாடும் விதத்தில் நேற்று சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தி, படத்தில் பணியாற்றியவர்களுக்கு வெற்றி நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அப்படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் கேரளா சென்றிருந்தார். எப்போதும் போல, தன்னை சந்திக்க வந்த ரசிகர்களை கட்டி அனைத்து, கண்ணத்தில் முத்தம் கொடுத்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். விஜய் சேதுபதியின் இத்தகைய நடவடிக்கையால், கேரள மாநிலத்தின், ஆலப்புழா மாநிலமே ஆடி போய்விட்டது. ஆலப்புழா ஏரியில் விஜய் சேதுபதி அலை ஏற்பட்டதோடு, கேரளா முழுவதும் விஜய் சேதுபதியின் புகழ் பரவி, அங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள்.
மேலும், கேரளாவில் உள்ள ஊடகங்கள் பல விஜய் சேதுபதி நேர்காணலுக்காக காத்திருக்கிறதாம். பலர் விஜய் சேதுபதியின் மேனஜருக்கு போன் செய்து, நேர்காணல் கேட்பதோடு, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க விஜய் சேதுபதியின் தேதி கேட்டு வருகிறார்களாம்.
இந்த நிலையில், திடீரென்று கேரள மாநில முதல்வர் அலுவலகத்தில் இருந்து விஜய் சேதுபதி மேனஜருக்கு போன் வந்திருக்கிறது. முதல்வர் அலுவலகத்தில் இருந்து வரும் போன்கால் என்றதும் விஜய் சேதுபதி ஏரியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட, பிறகு கேரள அரசின் பத்திரிகைக்கு விஜய் சேதுபதியின் நேர்காணல் வேண்டும், என்று எதிர் தரப்பில் இருந்து பதில் வந்ததும், சற்று சாந்தம் அடைந்தார்களாம்.
மொத்தத்தில், தமிழக மக்களை ஈர்த்த விஜய் சேதுபதி தற்போது அண்டை மாநில மக்களையும் ஈர்க்க தொடங்கி விட்டார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...