தமிழகத்தில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது, என்பதை விவரிக்கும் படமாக ‘பொது நலன் கருதி’ உருவாகியுள்ளது. கந்துவட்டியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையிஅ அலசியிருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் சீயோன் இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில், இயக்குநர்கள் மிஸ்கின், வசந்தபாலன், மீரா கதிரவன், சமூக ஆர்வளர் திருமுருகன் காந்தி, கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த பாலன் பேசுகையில், “சிறிய படங்களுக்கு நல்ல ரவேற்பு கிடைத்தாலும், தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள ’பேரன்பு’, ’சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.” என்று வருத்ததோடு பேசினார்.
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...
ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...
சந்திரசுதா ஃபிலிம்ஸ் சார்பில் பி...