தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜாவை கெளரவிக்கும் வகையில், ‘இளையராஜா 75’ என்ற தலைப்பில் இரண்டு நாட்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களுடன், பிற மாநில சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்றும் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...