’36 வயதினிலே’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த ஜோதிகா, தொடர்ந்து ’மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘காற்றின் மொழி’ என பெண்களை மையப்படுத்திய படங்களில் நடித்து வெற்றிப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் நயந்தாராவுடன் கூட்டணி வைத்து காமெடியில் கலக்கிய யோகி பாபுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஜோதிகா, காமெடி படம் ஒன்றில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் இப்படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.
ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். வீரசமர் கலையை நிர்மாணிக்க, விஜய் எடிட்டிங் செய்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்துக் கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...