தமிழ் சினிமாவின் நம்பர் காமெடி நடிகராகியுள்ள யோகி பாபு, முன்னணி ஹீரோக்களை தொடர்ந்து முன்னணி ஹீரோயின்களின் பேவரைட் காமெடி நடிகராகியுள்ளார். நயந்தாரா, ஜோதிகா என்று ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நடிகைகள் கூட, யோகி பாபுவை சிபாரிசு செய்கிறார்களாம்.
இப்படி லீடிங் காமெடியனாக இருக்கும் யோகி பாபு ஹீரோவாக்க பலர் முயற்சித்து தோற்றுப் போன நிலையில், இயக்குநர் சாம் ஆண்டன் மட்டும் அதில் வெற்றிப் பெற்றிருக்கிறார். ஆம், அவர் இயக்கி வரும் ‘கூர்கா’ படத்தில் யோகி பாபு தான் ஹீரோ.
தற்போது, ‘கூர்கா’ படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் கதை குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறியிருக்கிறார். அதாவது, கடத்தப்பட்ட கார் ஒன்றை, அப்பாவி கூர்காவும், அவரது நாயும் கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் ‘கூர்கா’ படத்தின் கதையாம்.
யோகி பாபு, கனடா நடிகை எலிஸ்சா உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கொடுத்த ஒத்துழைப்பால் படத்தை விரைவாக முடிக்க முடிநது என்று கூறிய சாம் ஆண்டன், படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.
காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள ‘கூர்கா’ கோடைக்காலத்தில் வெளியாக உள்ளது.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...