ஹீரோ, வில்லன், காமெடியன் மற்றும் குணச்சித்திர என்று எந்த வேடமாக இருந்தாலும் சினிமாவில் பிஸியாக இருப்பவர்கள் சிலர் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்படுவதும் உண்டு. அப்படி சிரமப்படுபவர்களில் சிலர் சுதாரித்துக் கொண்டு வேறு தொழிலுக்கு தாவுவதும் உண்டு. சிலர் மட்டுமே சினிமாவையே நம்பி, பிறகு வறுமையில் வாடுவதும் உண்டு.
அந்த வகையில், சினிமா மற்றும் சீரியலில் பிஸியாக இருந்த நடிகர் ஒருவர், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால், சலூன் தொழிலில் ஈடுபட்டு, தற்போது அதே தொழியிலில் பிஸியாகவும் ஆகிவிட்டார்.
அந்த நடிகர் ஷாம். தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்த ஷாம் தற்போது சலூன் தொழிலில் பிஸியாகிவிட்டதாக அவரது மனைவி சிந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அவரும் தற்போது சினிமா சீரியல் என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
தெய்வமகள் சீரியலில் திலகா என்ற வேடத்தில் நடித்த சிந்து, ‘காற்றின் மொழி’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஏராளமான சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருபவர், பரதநாட்டிய பயிற்சி வகுப்பும் எடுத்து வருகிறார். இப்படி கலைத்துறையில் பிஸியாக இருக்கும் சிந்துவிடம் அவரது கணவர் ஷாம் குறித்து கேட்டதற்கு, ”என் கணவர் ஷாம், முன்பு நிறைய படங்கள் மற்றும் சீரியல்களில் நடிச்சார். இப்போ அவர் சலூன் பிஸினஸ்ல கவனம் செலுத்துகிறார். அதுக்கே அவருக்கு நேரம் சரியா இருக்கு. நல்ல ஆக்டிங் வாய்ப்புகள் வந்தார் அவர் தொடர்ந்து நடிப்பார்.” என்று கூறியுள்ளார்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...