Latest News :

நா.முத்துகுமார் பாட்டுக்கு தேசிய விருது! - ரசிகர்கள் நம்பிக்கை
Saturday February-16 2019

லஷ்மி கிரியேசன்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘பெட்டிக்கடை’. இதில் ஹீரோவாக நடிக்கும் சமுத்திரக்கனி, பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ’மொசக்குட்டி’ வீரா நடிக்கிறார். 

 

கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இசக்கி கார்வண்ணன், தயாரிக்கவும் செய்திருக்கிறார். மரியா மனோகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மறைந்த நா.முத்துக்குமார், சினேகன், இசக்கி கார்வண்ணன், மடத்தமிழ் வேந்தன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

இப்படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய “சுடல மாட சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட...சொல்லு புள்ள...” என்ற பாடல் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதோடு, ரசிகர்களின் பாராட்டு மழையிலும் நனைந்து வருகிறது. மேலும், ஏற்கனவே பல தேசிய விருதுகளை பெற்றிருக்கும் நா.முத்துக்குமார், இப்படாலின் மூலமும் தேசிய விருது பெறுவார், என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Pettikkadai

 

‘பெட்டிக்கடை’ வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

4235

மணிகண்டனின் புதிய படத்தின் தலைப்பு ‘குடும்பஸ்தன்’!
Sunday October-06 2024

கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...

மாணவிகளின் வரவேற்பால் உற்சாகத்தில் ‘நேசிப்பாயா’ படக்குழு!
Sunday October-06 2024

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...

‘டி.என்.ஏ’ படத்திற்கு பின்னணி இசையமைக்கும் ஜிப்ரான்!
Sunday October-06 2024

‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...

Recent Gallery