’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானார். இருப்பினும், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரபல பெங்காலி நாளிதழ் ஒன்று யாஷிகா ஆனந்த் தற்கொலை செய்துக் கொண்டதாக, புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்து ரசிகர்களை மட்டும் அல்ல யாஷிகா ஆனந்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விசாரித்ததில், சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை யாஷிகா என்பவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவரைப் பற்றிய செய்தியை போட்டிருக்கும் அந்த நாளிதழ், அந்த செய்தியில் யாஷிகா என்ற நடிகையின் புகைப்படத்திற்கு பதில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை தவறுதலாக வெளியிட்டுவிட்டனர்.
இந்த விஷயம் அறிந்த யாஷிகா ஆனந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கோபத்தை ”What the hell :O" என்ற வார்த்தையால் வெளிப்படுத்தியுள்ளார்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...